News May 3, 2024

விழுப்புரத்தில் திடீரென பழுதான கேமராக்கள்

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்கு பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு திடீரென இன்று (மே 3) யுபிஎஸ் பேட்டரிகள் பழுதானதால், சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News November 12, 2025

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 12, 2025

விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!

image

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் கலிவரதன்(73). இவர் கடந்த நவ.9ஆம் தேதி வானூர் தாலுகா, விநாயகபுரம் சுடுகாடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி வானூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணையில் சொத்துக்காக வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் சக்திவேல் ஆகியோர் இணைந்து சொத்திற்காக கொலை செய்தது தெரியவந்ததும் அவர்களை கைது செய்தனர்.

News November 12, 2025

விழுப்புரம்: சர்க்கரை நோய் இருக்கா? இலவச முகாம்!

image

திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று(நவ.12) உழவர் சந்தை வளாகத்தில் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 8.30 மணி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

error: Content is protected !!