News November 20, 2024

விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன முன்னேற்றத்திற்கு தொண்டாற்றி வருபவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் விருது ஜனவரி 2025 இல் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே பட்டியல் இனத்தவருக்கு அரிய தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் போன்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

பெரம்பலூர்: 3 சக்கர நாற்காளிகளை வழங்கிய ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் 3 சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

News November 11, 2025

பெரம்பலூர்: ரயில்வேயில் வேலை… ரூ.29,735 சம்பளம்!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 11, 2025

மாநில உணவு ஆணைய மண்டல ஆய்வுக் கூட்டம்

image

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் மண்டல ஆய்வுக் கூட்டம், அதன் தலைவர் சுரேஷ் ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில், உணவு ஆணையம் சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

error: Content is protected !!