News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 25, 2026
விருதுநகர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 25, 2026
சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
News January 25, 2026
சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


