News November 19, 2025

விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

image

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 15, 2026

ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.

News January 15, 2026

ராஜபாளையத்தில் இன்ஸ்பெக்டர் கைது

image

ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்யசீலா ஸ்ரீவியில் நடந்த கொலை வழக்கில் ராம்குமார் என்பவருடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்த மாலதி(35) என்பவர் தன்னிடம் 33 பவுன் நகையை மோசடி செய்ததாக அளித்த புகாரில் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி ராம்குமார், சத்யசீலா ஆகியோர் மாலதியை மிரட்டிய நிலையில் சத்யசீலாவை போலீசார் கைது செய்தனர்.

News January 14, 2026

விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!