News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 16, 2026
விருதுநகர்: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 16, 2026
JUST IN விருதுநகர்: மீண்டும் பரபரப்பை கிளப்பிய எம்.பி

கூட்டணி ஆட்சியில் வளமிக்க துறைகளை காங்கிரஸ் நாடியதில்லை என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவை என தொடர்ந்து வலியுறுத்தும் மாணிக்கம் தாகூர் மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்களை மையமாக கொண்ட சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் குழந்தைகள் நலன் துறைகளை காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.
News January 16, 2026
விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது வழங்கிய முதல்வர்

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு விருது, விருது தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை வழங்கினார்


