News October 16, 2024

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நெகிழிப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News July 10, 2025

சிவகாசி: குடும்பமே விபத்தில் சிக்கிய கொடூரம்

image

சிவகாசி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன் (39). இவர் தனது மனைவி ஷோபனா (32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் பைக்கில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம் அருகே பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மாதவநாதன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News July 10, 2025

விருதுநகரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News July 10, 2025

பாலையம்பட்டி பைபாஸில் விபத்து; மூவர் உயிரிழப்பு

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி ஊராட்சியில் (ஜூலை 10) காலை 5 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களான மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரண்டு லாரிகளிலும் முன் பக்கம் முற்றிலும் சேதமாகியது. இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!