News October 10, 2025
விருதுநகர் மக்கள் புகார் அளிக்க எண் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கால இனிப்பு, கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பலகாரங்களின் தரம் குறைபாடு, சுகாதாரமற்ற கடைகள் குறித்து பொதுமக்கள் 04562-225255, 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News November 11, 2025
விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News November 11, 2025
ராஜபாளையம் இரட்டை கொலைக்கு EPS கண்டனம்

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு,அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தன பதிவில் பதிவிட்டுள்ளார்.


