News August 23, 2024
விருதுநகர் பஜாரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நிறைந்த நேரத்தில் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் காலத்தில் வயதானவர்கள் பஜாருக்கு வரும்போது மயக்கம் அடைந்தால் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வாகனங்கள் பஜாருக்குள் வர முடியாத அளவிற்க்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது.
Similar News
News December 9, 2025
விருதுநகர்: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
விருதுநகர்: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமியும் லோடுமேன் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2020-ம் ஆண்டு மாடசாமி இசக்கிமுத்துவை அருவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி மாடசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 9, 2025
விருதுநகர் அருகே கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


