News October 12, 2025
விருதுநகர்: குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

மத்திய அரசு சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. அரசு நகர்ப்புற, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
Similar News
News December 12, 2025
விருதுநகர்: SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.
News December 11, 2025
ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிரான வழக்கு ரத்து

பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை இன்று ரத்து செய்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.
News December 11, 2025
BREAKING விருதுநகர் அமைச்சரின் வழக்கு ரத்து

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 2020-ம் ஆண்டில் விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா காலத்தில் தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


