News May 14, 2024
விருதுநகரில் பெண் சடலமாக மீட்பு

தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
விருதுநகர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? CHECK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 10, 2025
விருதுநகர்: கப்பலில் வேலை.. 4.5 லட்ச ரூபாய் மோசடி

சாத்துாரை சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் நெல்லை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற போது, அவரது ஆசிரியர் டென்சிங் டேனியல் (45), மனைவி ஷர்மிளா (32) ஆகியோர் கவி விஷ்ணுக்கு சிங்கப்பூர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர் உட்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


