News November 20, 2024

விமான நிலைய விரிவாக்கம் – எம்.பி அறிக்கை

image

விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஒரு பக்கம். விமான நிலைய வளர்ச்சி மற்றொரு பக்கம். மக்கள் நலனையும், விமான நிலைய விரிவாக்கத்தையும் சமநிலைப்படுத்தி இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும் என நம்புகிறோம். மேலும் தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News December 7, 2025

மேலூர் அருகே 34 பேர் கைது

image

ஒத்தக்கடை எஸ்ஐ ஜெயம் பாண்டியன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுரை மேலூர் சாலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக சிலர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். குருசாமி(69) சிவ காமு(68), பிரகாஷ்(38) உட்பட 34 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.

News December 7, 2025

மதுரை மக்களே பிரச்சனையா.?.. இந்த நம்பரை அழையுங்க..!

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம். இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News December 7, 2025

மதுரை: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

image

மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ்(32). இவர் தர்ஷிகா(27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வசித்து வந்தார். தர்ஷிகாவிடம் வரதட்சணை கேட்டு ஹரிஷ் பெற்றோர் கொடுமைப்படுத்தி உள்ளனர். ஊமச்சிகுளம் போலீசார் தர்ஷிகா புகாரின் அடிப்படையில் ஹரிஷ், அவரது தந்தை சுப்பிரமணி (63), தாயார் மாரியசெல்வம்(60), புனிதா(35) என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!