News May 2, 2024
விடுமுறை அளிக்காத 114 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினமான மே 1 அன்று அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி மதுரையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம் 1961 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
மதுரை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 5, 2025
மதுரை: அரசு பஸ் மோதி துடிதுடித்து வாலிபர் பலி.!

தும்பைப்பட்டி அருகே நான்கு வழிச்சாலை ரோட்டோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற 35வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோத, தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தும்பைப்பட்டி விஏஓ சரவணன் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார். திருச்சி துறையூரை சேர்ந்த பஸ் டிரைவர் சுதாகரை கைது செய்த மேலூர் போலீசார் இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
News December 5, 2025
மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

மதுரையில் நாளை காலை காலை 9 முதல் மதியம் 3 மணி வரை விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லைநகர், சிவக்காடு, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, கருமாத்துார், மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி,கோவிலாங்குளம், வடபழஞ்சி தென்பழஞ்சி, பல்கலை நகர்.மற்றும் இதன் சுற்று பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


