News April 7, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க குழு

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதை செயல்படுத்துகிறதா என உறுதி செய்வதற்காக கோவை தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி, துணை ஆய்வாளர் சுப்ரமணியம் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

கோவை பீளமேடு அருகே பயங்கரம்!

image

கோவை தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்த சென்னிமலையைச் சேர்ந்த கோவர்தன மணி பாரதி (18) நேற்று பைக் விபத்தில் உயிரிழந்தார். பீளமேடு அருகே அவர் சென்றபோது, ஆம்னி பேருந்து உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் சக்கரம் அவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

கோவையில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி

image

கோவை மாநகரில் வசிக்கும் தொழிலதிபர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நோட்டமிடும் மும்பையை மர்ம கும்பல் அவர்களுக்கு போன் செய்து உங்களது ஆதார் கார்டு எண்ணை வைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்ண்டு வருகின்றனர்.

News February 19, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (18.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!