News November 14, 2025

வால்பாறை மாணவி மாநில போட்டிக்கு தேர்வு!

image

வால்பாறை ஒன்றியத்தில் நடந்த கலைத்திருவிழாவில், 68 பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில், வால்பாறை அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷிகா, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 16, 2025

கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 15, 2025

கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (15.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

image

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!