News August 20, 2024

வாய்க்காலில் உடைப்பு: அமைச்சர் ஆய்வு

image

காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பகுதியில் எல்பிபி வாய்க்காலில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை நீர் திறப்பு சட்டர் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சங்கரா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். போர்க்கால அடிப்படையில் சரி செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். 

Similar News

News January 13, 2026

ஈரோடு: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு

image

ஈரோடு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 13, 2026

ஈரோட்டில் சவுக்கு சங்கர் மீது புகார்

image

பகுஜன் சமாஜ் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் எஸ்.பி. சுஜாதா-விடம் மனு அளித்தனர். அதில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்குசங்கர் பணம் சம்பாதித்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

News January 13, 2026

ஈரோடு அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

ஈரோடு, மாதம்பாளையத்தைச் சேர்ந்தவர் குபேரன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குபேரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!