News June 2, 2024

வாகனம் மோதி 20 ஆடுகள் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூரில் சிவன் பாண்டி என்பவர் தனது பட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை விரட்டி சென்றதில் 20 ஆடுகள் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. இதுகுறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

Similar News

News July 9, 2025

திண்டுக்கல்லில் தொழில் முன்னோடிகள் திட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைய https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை 8925533943 தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in (அ) www.Invelaivaaippu.gov.in இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

News July 9, 2025

திண்டுக்கல்: கள்ளக்காதலால் அரிவாள் தூக்கிய அண்ணன்!

image

திண்டுக்கல்: பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன்கள் பவித்ரன்(30), ஹரிஹரன்(26). இந்நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் பவித்ரன் தம்பி ஹரிஹரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!