News August 8, 2025
வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
Similar News
News November 10, 2025
ஆரணி: நதியில் மூழ்கி சிறுவன் பலி!

தி.மலை: ஆரணி வட்டம், ஜெயலட்சுமி நகர் பின்புறம் உள்ள கமண்டல நாக நதி ஆற்றில் நேற்று மாலை குளிக்க 3 நபர்கள் சென்றபோது ஒரு சிறுவன் தவறி ஆற்றில் விழுந்துள்ளான். அவனது உடல் இன்று(நவ.10) காலை சுமார் 9:00 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டு பிறகு பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 10, 2025
தி.மலை: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 10, 2025
திருவண்ணாமலையில் TNPSC இலவச பயிற்சி!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNPSC Group-2, 2A முதன்மைத் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆதார் நகல், புகைப்படம், விண்ணப்ப நகலுடன் வகுப்பில் கலந்து கொள்ளலாம்.


