News May 15, 2024
வரத்து குறைவால் பலாப்பழங்கள் விலை உயர்வு

கொல்லிமலை சோளக்காடு பழங்குடியினர் சந்தையில், வரத்து குறைவால் பலாப்பழங்கள் விலை உயர்வடைந்துள்ளது. தற்போது மலைப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலாப்பழம் சோளக்காடு பழங்குடியினர் சந்தை மற்றும் தெம்பலம் ஆகிய 2 சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறிய ரக பலாப்பழம் ரூ.170-க்கும், சற்று பெரிய ரக பலாப்பழம் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 13, 2025
BREAKING: நாமக்கல்லில் புதிய உச்சம் தொட்ட விலை!

நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று (டிச.13) ரூ.6.20 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முட்டை விலை ரூ.6.15 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. முட்டை தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளதால் விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 13, 2025
நாமக்கலில் பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


