News April 17, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

image

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

Similar News

News November 10, 2025

அரியலூர்: 334 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இல்ல வசதி, வீட்டு மனைபட்டா, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 334 மனுக்கள் பெறப்பட்டன.

News November 10, 2025

அரியலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

image

அரியலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற சுகாதாரத் துறைக்கான அடுத்த திட்டம் என்ன உள்ளிட்ட திட்ட யோசனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கி 500 வார்த்தைகளுக்குள் பதிவு செய்து tndiprmhnks@gmail.com அல்லது 9498042408 ஆகிய ஏதேனும் ஒரு வழிகளை பயன்படுத்தி அனுப்பி வைக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!