News October 9, 2024
வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம்

சுல்தான்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக சிவகாமி,பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராஜா செல்வம், ஆனைமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பணியிட மாறுதல் தொடர்பாக எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்க விடுமுறை எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
கோவை: மக்கள் வெளியே நடமாட வேண்டாம்!

கோயம்புத்தூர் அருகே உள்ள ஆனைமலை பாசிபைத்தான்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்தது. இதனால் மேலும் ஒரு கூண்டு நேற்று கொண்டு வரப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டது. எனினும் சிறுத்தை பிடிக்கும் வரை மாலை 6 மணிக்கு மேல் மக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம். நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவித்துள்ளது.
News November 14, 2025
கோவை: மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்!

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், மனைவி மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கடந்த (அக்.28) ஆம் தேதி கொலை செய்து தடாகம் போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் தான் கொலை செய்ய வைத்ததாக தெரிய வந்தது. பின் போலீசார் கவி சரவணகுமாரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.


