News May 14, 2024
லாரி மோதி பாய் வியாபாரி பலி

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்த்தவர் கோவிந்தராஜ்(பாய் வியாபாரி). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தேக்கல்நாயக்கன்பட்டி – கடத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
தருமபுரி: பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை!

தருமபுரி: திம்மம்பட்டியைச் சேர்ந்த முரளி (35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.
News December 17, 2025
தருமபுரி: பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது போக்சோ!

தருமபுரி: நல்லம் பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவிக்கு, ஆசிரியர் மணிவண்ணன் சில நாட்களுக்கு முன்னர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளிக்காமல் இருக்க ரூ.10 லட்சம் தருவதாகவும் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர், மணிவண்ணன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் நேற்று போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
News December 17, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி, அதியமான் கோட்டை, தொப்பூர், மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஏ பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.17) காலை வரை ரோந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் சூழலில் இவர்களை அணுகலாம்!


