News August 4, 2024
ரேஸ் பைக் மோதி காவலர் உயிரிழப்பு

போரூர், ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று (ஆகஸ்ட் 4) மதியம் போரூர் சுங்கச்சாவடி அருகே பைக்கில் ரோந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ரேஸ் பைக் இவர் மீது மோதியது. இதில், பைக்குடன் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரேஸ் பைக் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News January 15, 2026
தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
செங்கல்பட்டு: கணவன் தொல்லையா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, செங்கல்பட்டு மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9940801968-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
செங்கை: முக்கிய அரசு எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


