News August 6, 2024
ரேஷன் கார்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் பெரும் ஒரு சிலருக்கு குடும்ப உறுப்பினர் பெயர்கள் பிளாக் செய்திருப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய முழு ரேஷன் பொருட்கள் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பபட்டது. இந்தப் பிரச்சினையை ஆணையரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
செங்குன்றம்: நிலத் தகராறில் மூவருக்கு வெட்டு!

செங்குன்றம்: சுரேந்தர்(34) என்பவர் ஆட்டந்தாங்கல் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த நவ.11ஆம் தேதி, நண்பர்களுடன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம்(42), கூட்டாளிகளுடன் வந்து, அந்த இடத்தை உரிமை கோரியதில் தகராறு முற்றியது. இதில், பாலசுந்தரம் மூவரையும் வெட்டி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
திருவள்ளூரில் மழை ; பள்ளிகளுக்கு விடுமுறையா..?

திருவள்ளூர்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபடி, இன்று(நவ.17) திருவள்ளூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்ரந்து, வரும் நவ.21ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 17, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க


