News October 17, 2025

ரூ 5 கோடியில் திருமலை நாயக்கர் மஹாலில் டிஜிட்டல் ஒலி ஒளி காட்சி

image

மதுரையில் சரித்திர அடையாள பெருமைகளில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மஹாலில் நடத்தப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சி சுற்றுலா பயணிகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது பழுதடைந்த இந்த காட்சி சேவையை புதுப்பிக்க ரூ 5 கோடி செலவில் லேசர் ஒலி ஒளி 3 டி புரஜக்சன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் தயாராகிவரும் ஒலி ஒளி காட்சி பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேவை டிசம்பருக்குள் துவக்கப்பட உள்ளது.

Similar News

News November 11, 2025

மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்

image

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு, தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, நவம்பர் 20 முதல் ஜனவரி 15 வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் மகாராஷ்டிரா, ஹஜூர் சாஹிப் நந்தெத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07111), மதுரை, திண்டுக்கல் வழியாக கொல்லம் செல்கிறது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News November 11, 2025

மதுரை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

image

மதுரை மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

News November 11, 2025

மதுரை மகளிர் காவல்நிலையம் முற்றுகை

image

மதுரை வசந்தநகர் அரசு உதவி பெறும் பள்ளி பாலியல் தொந்தரவு வழக்கில், ஆசிரியர் ஜெயராம் மற்றும் உடந்தையாக இருந்த தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது நவம்பர் 5-ல் ‘போக்சோ’ சட்டம் பதியப்பட்டது. கைது செய்யாததால், நேற்று அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!