News September 29, 2025
ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழிப் போட்டித் தேர்வு, வருகிற நவ.16ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வானது, ரோவர் பொறியியல் கல்லூரி, சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறும் என்றும் தேர்வு எழுதவிருப்போர், தேர்வுக்கான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


