News October 20, 2025

ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

மேலுாரில் தீபாவளியை முன்னிட்டு நேற்று சிறப்பு சந்தை நடந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 9, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 9, 2025

மதுரை அருகே தீவைத்து முதியவர் தற்கொலை

image

அத்திப்பட்டி வடக்கு தெரு சின்னபாண்டி 60, இவர் வீட்டில் டூ வீலருக்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி அவரே தீ வைத்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி, இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!