News November 2, 2025

ராம்நாடு: ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

image

இன்று இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத்துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டுப்படக்கில் இருந்தது. இதனை அடுத்து கடல் அட்டையையும், நாட்டுப்படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 17, 2025

இராம்நாடு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

இராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

இராமநாதபுரம் மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் இராமநாதபுரம் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000472, 9445000473 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!