News September 29, 2025
ராம்நாடு: மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா மண்டபம் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மண்டபம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். வ :எண் 16343/16344 ராமேஸ்வரம் வரை நீட்டித்து, விரைவில் இயக்கப்படவுள்ள அமிர்தா விரைவு ரயில், ராமேஸ்வரம் தாம்பரம் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் பிராந்திய ரயில் பயனர்கள் மனு அளித்தனர்.
Similar News
News November 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

இன்று (நவ. 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 7, 2025
ராம்நாடு: கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் மற்றும் கோகுல நாத் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் மீது காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 7, 2025
ராம்நாடு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரத்தில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


