News November 10, 2024
ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 மீனவர் 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே இன்று(நவ.,10) காலை சிறைபிடித்துச் சென்றனர். அடிக்கடி சிறை பிடிக்கப்படும் இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
ராம்நாடு: இளைஞர் வெட்டிக்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெரிய கடை காய்கறி மார்க்கெட் தெருவில் சுரேஷ் பாக்கியம் தம்பதியரின் மகன் கார்த்திக் (21) என்கிற இளைஞர் நண்பர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த பரமக்குடி டவுன் போலீசார்கள் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 12, 2025
நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்திற்கு வருகை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடங்கி உள்ளார். இப்பயணம் மேற்கொண்டுள்ள நயினார் நாகேந்திரன் நவ.13ல் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உரை ஆற்ற உள்ளார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
News November 11, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


