News August 8, 2025
ராமநாதபுரம்: 1000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இரட்டைஊரணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 36 பண்டல்களில் 1000 கிலோ பீடி இலைகளை டிராக்டரில் கொண்டு வந்தனர். உச்சிப்புளி காவல்துறையினர் கடத்தல்காரர்களை மடக்க முயன்றபோது, டிராக்டர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் வருண்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
ராம்நாடு: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

ராமநாதபுரம் மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <
News November 11, 2025
ராம்நாடு: இலவச டூவீலர் பயிற்சி முகாம்

பொதுத்துறை வங்கி (IOB) சார்பில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும்பயிற்சி நாளை (நவ. 12) தொடங்குகிறது. ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் பயிற்சி நடைபெறும். இதில், சான்றிதழ், தொழில் தொடங்க வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த 19 – 45 வயதுக்குட்பட்டோர் இதில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய இன்று (நவ. 11) கடைசி நாள். தொடர்புக்கு – 88259 54443, 80567 71986.
News November 10, 2025
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ. 10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


