News March 31, 2025

ராமநாதபுரம்: ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல்அட்டைகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தென் கடலில் இந்திய கடலோரக் காவல் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் தலா 40 கிலோ வீதம் 5 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கைப்பற்றினர். கைப்பற்றிய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News July 9, 2025

சாயல்குடி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

ராமநாதபுரம், மாவட்டம் சாயல்குடி அருகே சண்முகக்குமாரபுரத்திற்கும் பூப்பாண்டியபுரத்திற்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR ) இன்று மாலை வேன் ஒன்று டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வேனில் பயணித்தவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. விபத்து நேரத்தில் வேனுக்கு முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லாததால் மேலும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

News July 9, 2025

உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

News July 9, 2025

ராமநாதபுரம்: ஹஜ் பயணம் போறீங்களா?

image

தமிழ்நாடு அரசு 2026 பற்றிய ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் இஸ்லாமிய மக்கள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து தங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். அல்லது, Haj Suvidha என்ற மொபைல் ஆப் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மதம் கடந்து SHARE செய்யுங்கள். யாருக்கேனும் ஒருவருக்கு உதவியாக இருக்கும்.

error: Content is protected !!