News August 5, 2024
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05/08/24) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தகோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Similar News
News January 20, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News January 19, 2026
இராம்நாடு: ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருப்புல்லாணி அடுத்த தோப்புவலசை மீனவ கிராம கடற்கரையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 116 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 19, 2026
இராமநாதபுரம்: நாளைய மின்தடை பகுதிகள்

இராமநாதபுரம், கீழக்கரை ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகள், ராஜசூரியமடை பகுதிகளில் உள்ள 110/ 33 – 11 என்ற துணை மின் நிலையங்கள், திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் உள்ள ரெகுநாதபுரம் 33/11 என்ற துணைமின் நிலையம் மற்றும் தேரிருவேலி கிராம பகுதியில் உள்ள 110/ 33 – 11 துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க


