News November 29, 2024
ராமநாதபுரம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

கலைப் பண்பாட்டு துறையின் கீழ் 2025 ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று மதுரையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலை குழுக்கள் கலந்து கொள்ளலாம். www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களது திறமைகளை 5 நிமிட வீடியோவாக எடுத்து சிடி அல்லது பென்டிரைவில் விண்ணப்பத்துடன் படத்தில் காணும் முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும்.
Similar News
News November 11, 2025
தாய்லாந்தில் பட்டம் வென்ற இராமநாதபுரம் பெண்

முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரபு அல்லிராணி ஆகியோரின் மகள் ஜோதிமலர்(28). பி.டெக் பட்டதாரியான இவர் கடந்த நவம்பர் 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்திய சார்பில் போட்டியிட்ட ஜோதிமலர் கலாச்சார தூதர் பட்டம் வென்றார். ஜோதி மலர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
ராம்நாடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
ராமநாதபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு.. எஸ்.பி தகவல்

டில்லியில் கார் வெடி விபத்து சம்பவத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள்,
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என பக்தர்கள் அதிகம் கூடுமிடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 இடங்களில் வாகன சோதனை, 15 ரோந்து வாகனங்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.


