News November 3, 2025

ராணிப்பேட்டை: இறந்தவர் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவலம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், ரெண்டாடி பகுதியில் இறந்தவர்களை ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பருவமழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. அதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் ஊராட்சி அதிகாரி, விரைவில் உங்களுக்கு மயான காடு அமைக்கபடம் என மக்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

image

ராணிப்பேட்டை ரெட்டிவலம் அருகில் நேற்று (நவ.7) அரக்கோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அரசு பஸ் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

News November 8, 2025

ராணிப்பேட்டை:ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகளை இந்த குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பம் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 8, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-07) இரவு 10 மணி முதல் இன்று
(நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!