News April 10, 2024

ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் மாநகர் மட்டுமின்றி புறநகர், சிப்காட் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், 19ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், ஜனநாயக கடமை ஆற்ற தங்களது சொந்த ஊருக்கு செல்ல, ஈரோடு இரயில் நிலையத்தில் இன்று குவிந்தனர்.

Similar News

News November 9, 2025

பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

image

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

News November 8, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடல் நலக்குறைவாகவும் அல்லது சோர்வாகவும் இருக்கும் பொழுது வாகனம் ஓட்டுவதை தவிர்த்திடுவோம்.விபத்தில்லா பயணத்தை உருவாக்குவோம் என இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக விபத்து தடுப்பு விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

News November 8, 2025

ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

image

ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!