News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 24, 2026

விழுப்புரத்தில் விஷம் குடித்து தற்கொலை!

image

செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் தவச்செல்வி(26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்னரே கணவர் இறந்து விட்டார். இந்நிலையில், தாயுடன் வசித்து வந்த அவர், நேற்று முன் தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 24, 2026

திண்டிவனத்தில் கிடந்த ஆண் சடலம்!

image

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்பாதி மேம்பாலம் அருகே 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

விழுப்புரத்தில் உடல் கருகி பலி!

image

செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாம்பாள்(73). இவர், கடந்த ஜன.18ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி எரிந்தது. இதில், கடுமையான தீக் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனினி உயிரிழந்தார்.

error: Content is protected !!