News May 5, 2024

ரயில்வே சுரங்கப்பாதை பணியில் மோதல்

image

அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் இரு குழுக்களாக பிரிந்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். நேற்று இரவு அரக்கோணம் புளியமங்கலத்தைச் சேர்ந்த ரகுபதி , கீழ்ப்பாக்கம் சீமியோன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டது சீமியோன் ரகுபதியை அடித்து கீழே தள்ளியதில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் தலையில் குத்தி படுகாயம் அடைந்தார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 14, 2025

ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

image

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

News November 14, 2025

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

News November 14, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் குழந்தைகள் தின வாழ்த்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்கப்பட்டது. பள்ளி முன்பு அதிகாரிகள் குழந்தைகளுடன் கலந்துரையாடி, போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் முதன்மை என காவல்துறை தெரிவித்தது.

error: Content is protected !!