News November 19, 2025

மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

image

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.

Similar News

News January 14, 2026

2வது ODI-ல் ஜுரெல் or நிதிஷ்.. யார் விளையாடுவாங்க?

image

NZ-க்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. ஜுரெல் & நிதிஷ் குமார் ரெட்டி இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படலாம். பயிற்சியாளர் கம்பீர் ஆல்ரவுண்டர்களையே அதிகம் விரும்புவதால், நிதிஷ் குமார் ரெட்டிக்கே சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க இந்தியாவின் பெஸ்ட் பிளேயிங் XI-ஐ சொல்லுங்க?

News January 14, 2026

நள்ளிரவில் பஸ்களை ஆய்வு செய்த அமைச்சர்!

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் புறப்படுகின்றனவா, டிக்கெட் விலை சரியாக உள்ளதா என்பதை மக்களிடமும் கேட்டறிந்தார். மேலும், கூடுதல் கட்டணத்தை தடுக்க 36 குழுக்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

error: Content is protected !!