News May 2, 2024
முழுவதுமாக சாலை அமைக்க மக்கள் போராட்டம்

மன்னார்குடி 15 வது வார்டு கனகசபை பிள்ளை தெருவில் 200 மீ நீளம் தார் சாலை போடும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 100 மீ மட்டுமே சாலை அமைக்கப்படும் என தகவல் வெளியானதால் தெருவாசிகள் சாலை அமைக்கும் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் 200 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்த பின் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
Similar News
News December 10, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக IT WING மாநில செயலாளர் சதீஷ்குமார் முகநூலில் திருப்பரங்குன்றம் சம்பந்தமாக பதிவிட்ட பதிவிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரின் அலுவலகத்தில் புகுந்து தாக்க முற்பட்டதாகவு; இது தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களின் மீது வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளதாகவும் கூறி, இன்று பேரளம் கடைதெருவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
News December 10, 2025
திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.
News December 10, 2025
திருவாரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.


