News May 2, 2024
முறம், துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு ஊராட்சியில் உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள திரவுபதி தர்மராஜ சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. டி.கொத்தப்பள்ளி, கூட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அருள் வந்து ஆடிய கோவில் பூசாரி முறம் மற்றும் துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசி வழங்கினார்.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரி: மக்கள் குறைதீர்வு கூடத்தில் 531 மனுக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (டிச-15) ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 531 மனுக்கள் பெறப்பட்டன. பின் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு உரிய தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் வாகன ஏலம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் வாகன ஏலம் அறிவிக்கப்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 73 வாகனங்கள், வரும் (டிச.23) காலை 10 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும், ஏலத்திற்கு வருவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு ஷேர்!
News December 15, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


