News November 19, 2024
முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News December 13, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.13) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (வெங்கடாசலம் – 9597406752) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 13, 2025
BREAKING: நாமக்கல்லில் புதிய உச்சம் தொட்ட விலை!

நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று (டிச.13) ரூ.6.20 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முட்டை விலை ரூ.6.15 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. முட்டை தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளதால் விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


