News August 23, 2025

முத்தங்கி அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில் ஆஞ்சநேய பகவானுக்குப் பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Similar News

News January 16, 2026

நாமக்கல்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். அதிகம் ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

நாமக்கல்லில் அதிரடி ரத்து அறிவிப்பு!

image

ப.வேலுார் அருகே கபிலர்மலை தைப்பூச தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிகழ்வில் ராட்டினங்கள் அமைக்க ஒரு நபருக்கு ஏலம் விடுவது வழக்கம். 3வது முறையாக, நேற்று கபிலக்குறிச்சி கிராம பஞ். அலுவலகத்தில் ஏலம் நடந்தது. 7 தனியார் நிறுவனங்கள், ‘சிண்டிகேட்’ அமைத்துக்கொண்டு. 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ராட்டின எலத்தை மீண்டும் ரத்து செய்தனர்.

News January 16, 2026

நாமக்கல்: திருமண தடை நீங்க இங்க போங்க!

image

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. மேலும், கி.பி.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. இங்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்திக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!