News September 3, 2025

முதுகலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான தொடர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.மேலும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் உதவியுடன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 17, 2025

நாமக்கல்: 3,739 கோடி ரூபாய் கடன் – தகவல்

image

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், கூட்டுறவு வார விழாவில் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்த நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளோம்’ என செய்தியாளர்களிடம் கூறினார்.

News November 17, 2025

நாமக்கல்லில் ரூ.14,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

image

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நாளைக்குள் (நவ.17) வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் குறித்த விபரம்!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் இரவு நேர ரோந்து பணி ஈடுபடும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள், தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!