News June 18, 2024
முதலிடம் பிடித்த சேலம் மாவட்டம்

ஊரக குடிநீா் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஊரக குடிநீா் இயக்க திட்டம், நிதிக்குழு திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54%) வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழை, அமைச்சா் கே.என்.நேருவிடம் காண்பித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து பெற்றாா்.
Similar News
News January 25, 2026
ஆத்தூர்: திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் அதிமுக

ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், கடந்த 2011 – 2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுகவில் இணைந்தது சேலம் அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
News January 25, 2026
சேலத்தில் மாணவி உயிரிழப்பு.. CM ஸ்டாலின் இரங்கல்

ஓசூரைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, சேலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள CMஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
News January 25, 2026
சேலம் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 04272418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


