News June 19, 2024

முடிவுக்கு வரும் மாஞ்சோலை சகாப்தம்!

image

நெல்லை, அம்பை அருகே 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மாஞ்சோலை எஸ்டேட். சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான இவ்விடம் 1948-ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அரசிடம் சென்றது. அன்றைய காலத்தில் இந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததால் 2028 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது குத்தகை முடிவதால் மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை குறித்த உங்கள் அனுபவம் என்ன?

Similar News

News January 17, 2026

நெல்லை: 3 பேருக்கு அரிவாள் வெட்டு; ஒருவர் கைது!

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரியின் அலைபேசியில் இருந்து அவரது நண்பர் பாலாஜி, பாஞ்சாலராஜன் என்பவரது மாமியாரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, இசக்கி பாண்டி ஆகிய மூவரை பாஞ்சாலராஜன் அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹரி கொடுத்த புகாரில் பாஞ்சாலராஜனை இன்று போலீசார் கைது செய்தனர்.

News January 17, 2026

நெல்லை: உங்க நீதிமன்ற CASE பற்றி ஈசியா தெரிஞ்சிக்கலாம்…

image

நெல்லை மக்களே நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்களாகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT

News January 17, 2026

நெல்லை: சாலை விபத்தில் கொத்தனார் பலி

image

நெல்லையை அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(59). கொத்தனாரான இவர் கல்லூரில் இருந்து சுத்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரதவிதமாக நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!