News July 4, 2025

மீன் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு

image

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 6 நாள்களுக்கு நடைபெற உள்ளது. வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்துடன் அட்மா திட்டத்தின் கீழ் இப்பயிற்சி நடைபெற உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 17, 2025

தஞ்சை: பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூதாட்டி கைது!

image

வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக பகுதியில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் சரோஜா (64) என்பவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சரோஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

தஞ்சை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!