News August 17, 2025
மீனாட்சிபுரம்: கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு

போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அப்பகுதியில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகின்றார். இந்த பண்ணை அருகே ராமசாமி, பிரபாகரன், முனீஸ்வரன், பாபு ஆகியோரது நிலம் உள்ளது. தங்களது நிலம் அருகே கோழிப்பண்ணை செயல்படுவது பிடிக்காமல் 4 பேரும் பண்ணைக்குள் பூனைகளை விட்டதுடன் குமரேசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். போடி தாலுகா போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (ஆக.16) பதிவு செய்து விசாரணை.
Similar News
News December 12, 2025
தேனி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 12, 2025
தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.
News December 12, 2025
தேனி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

தேனி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க


