News November 29, 2024
மீனவர்கள் விடுதலை: மத்திய அமைச்சருக்கு கனிமொழி MP நன்றி

தூத்துக்குடி எம்பி கனிமொழி நேற்று(நவ.,28) தனது முகநூல் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
தூத்துக்குடி: நபார்டு வங்கியில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <
News November 13, 2025
SIR படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR கணக்கெடுப்பில், படிவங்களை விநியோகம் செய்யும் பணி நவ.4 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நவ.11 மாலை 4 மணியளவில் 70% கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் படிவங்களை நிரப்புவதற்காக நவ.15 & 22 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என தூத்துக்குடி தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
பொட்டலூரணியில் 548-வது நாளாக தொடரும் போராட்டம்..

பொட்டலூரணியை சுற்றியுள்ள மூன்று தனியார் கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இன்று (12.11.2025) தொடர் போராட்டத்தின் 548-ஆம் நாள் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொட்டலூரணி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..


