News November 4, 2025
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 16, 2025
அதிசயமே அசந்து போகும் ராஷி கண்ணா

ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார். அரண்மனை 3&4 படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு, பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது, பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களில், சிலை போல போஸ் கொடுத்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 16, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்றிரவோ (அ) நாளை காலையோ தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 16, 2025
BREAKING: விஜய் – உதயநிதி மோதல்

திமுக சார்பில் நடைபெற்றுவரும் அறிவுத் திருவிழாவை விமர்சித்த விஜய்க்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக நடத்துவது அறிவுத் திருவிழாவா? அவதூறு திருவிழாவா? என விமர்சித்திருந்தார். இந்நிலையில், அறிவு இருப்பவர்கள் திருவிழா நடத்துவார்கள், தவெகவினருக்கு அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி என உதயநிதி மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.


