News August 22, 2024

மின்வாரியத்திற்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

image

ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமசுப்பு நஷ்டத்தால் மூடப்பட்ட தனது நூற்பாலை மின் இணைப்பை துண்டித்து டெபாசிட் தொகை ரூ.1.50 லட்சத்தை திரும்பித் தரக்கோரி கடந்த ஆண்டு மின்வாரிய உதவி பொறியாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டை நாடினார். இதில் டெபாசிட் ரூ.1.50 லட்சத்தையும், இழப்பீடாக ரூ. 25,000 வழக்கு செலவு ரூ.5 ஆயிரத்தை மின் பகிர்மான கழகம் வழங்க உத்தரவிட்டது.

Similar News

News November 14, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனையில் வேலை

image

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4, சிகிச்சை உதவியாளர் 4 ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in முலம் பதிவிறக்கம் செய்து நவ. 14க்குள் மாவட்ட சுகாதார நல அலுவகத்தில் சமர்பிக்க வேண்டும்.

News November 13, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, விருதுநகர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News November 13, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

image

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!